ஞாயிறு, 3 ஜூலை, 2016

கடல் புறா- சாண்டில்யன் (பாகம் 2)



பாலூர்ப் பெருந்துறையில் சிக்கிக்கொண்ட இளைய பல்லவனை அகூதா காப்பாற்றி கப்பலில் போர் பயிற்சி அளிக்கிறார். அகூதாவின் வழிக்காட்டலின் பேரில் மிக விரைவிலேயே இளையபல்லவன் பிரசித்திப்பெற்ற கடற்போர் வீரனாக அறியப்படுகிறான்.

நாவலின் இரண்டாம் பகுதி அஷையமுனையில் தொடங்குகிறது. அஷையமுனைக் கோட்டைத் தலைவன் பலவர்மன், குணவர்மனின்  ஒன்றுவீட்டுச் சகோதரன் என்பதையும் , மிகவும் ஆபத்தானவன் என்பதையும் இளையபல்லவன் கண்டறிகிறான். அஷையமுனையில் தான் சிறிய கடற்படை அமைக்க விரும்புவதாக கோட்டைத் தலைவனின் உதவியை நாடுகிறான். அவ்விடம் கோட்டத் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சளழகியின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மஞ்சளழகியும் இளையபல்லவன் பால் ஈர்க்கப்படுகிறாள். இவற்றை தனது அரசியலில் இலாபத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள பலவர்மன் முனைகிறான். 

இதற்கிடையில் மஞ்சளழகியை மணமுடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனக்குக் கிடைத்த சலுகையைப் பயன்படுத்தி இளையபல்லவன் தனது மரக்கலத்தை மறுசீரமைக்கிறான். அதற்கு புறாவின் முகத்தை அமைத்து, கடாரத்தின் இளவரசியின் நினைவாக 'கடல் புறா' என பெயரிடுகிறான். இளையபல்லவனைக் கொலை செய்ய பலவர்மன் வெகுவாக முயன்று தோல்வியைத் தழுவுகிறான். மஞ்சளகி அகூதாவின் சகோதரிக்கும் ஜெயவர்மனுக்கும் பிறந்தவள் என்ற இரகசியம் வெளிவருகிறது.

இறுதியாக, தனது சாமர்த்தியத்தின் மூலம் கலிங்கத்தின் கடற்பலமாகத் திகழ்ந்த அஷையமுனையை இளையபல்லவன் கைப்பற்றி, மறுசீரமைக்கிறான். அதனை மஞ்சளழகிக்கு அளித்து அரசாளும் உரிமையை வழங்குகிறான். பின்னர், மிஞ்சியிருக்கும் தனது கடமையை நிறைவேற்ற மீண்டும் படற்பயணம் மேற்கொள்கிறான். இம்முறை கரையிருந்தபடியே கனத்த இதயத்துடன் அவனை வழியனுப்புவது மஞ்சளழகி.

...தொடரும்...








கருத்துகள் இல்லை: