வியாழன், 10 ஜூன், 2010

கனவே!


வாழ்க்கையே கனவா
கனவுதான் வாழ்க்கையா
கனவுகள் பல விதம்
வாழ்க்கையே தனிவிதம்!

பகலிலும் கனவு
கனவிலும் ஆசை
நிறைவேறா ஆசைகள்
கனவிலும் நடக்காதா?

காலங்கள் வேகமாய் ஓடும்
கனவுகள் விதம் விதமாய் மாறும்
நனவாக ஆகும் முன் சாகும்
கனவினால் இதயமே நோகும்!

உயிரின்றி சாவா?
கனவின்றி வாழ்வா?
காண்பதெல்லாம் மெய்யா?
மற்றதெல்லாம் பொய்யா?

நான் காணும் கனவுகள்
நனவாக மாறாதா?
கற்பனைக் கவிதைகள்
உயிர்ப்பெற்று வாழாதா?