’நகைச்சுவை சிறுகதைகள்’
எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நூலில் நகைச்சுவையைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.
இதனைப் படித்து முடித்த பிறகும் இவை சிறுகதைகளா அல்லது நாவலா என்ற குழப்பம் இன்னும்
தீர்ந்தப்பாடில்லை. இடையிடையே நாடக பாணியும் கையாளப்பட்டிருக்கிறது. ஆரம்ப அத்தியாங்களில்
இவை பல்வேறு சூழலில் இயங்கும் கதைகளாகவும், பின்னர் பட்டுமாமியின் மகள் மற்றும் மருமகனைச்
சுற்றியும் பின்னப்பட்டுள்ளது. கண்டிப்பாக இவர் புதிய எழுத்தாளராகத்தான் இருக்க வேண்டும்.
எழுத்து நடையில் சற்று தள்ளாட்டம் தெரிகிறது. கதையைக் கோர்வையாக கொண்டுசெல்ல மிகவும்
சிரமப்பட்டிருக்கிறார்.
மற்றபடி, பிராமணர்களின்
பேச்சு நடையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் எதையோ சொல்ல வருகிறார், பலவற்றை
இடையிடையே புகுத்திச் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லாமல் விட்டுவிட்டார். பொழுதுபோக்கிற்காக
வேண்டுமானால் இதனைப் படிக்கலாம். சிரித்துப்படிக்கும்படியாக எதுவும் இல்லை. கதையில்
கடைசி நான்கு வரிகளை நீக்கிவிட்டால், குழந்தைகள் படிக்க ஏதுவான புத்தகமாக மாறிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக