வெள்ளி, 23 டிசம்பர், 2011

காதல் துரோகி!




நடந்தது நிஜம்தானா
நான் கண்ட கனவா?
காதல் கொண்ட நாயகன்
காதல் செய்வதையே
பொழுதுபோக்காய் கொண்டான்
அவன் காதல் செய்யவில்லை
வெறும் காமம் கொண்டான்!

காதல் என்று சொல்லி
கன்னியர் வாழ்வை அழித்தான்
இருசித்துப் பார்த்தப் பிறகு
தூக்கி எறிந்தான்!

வழி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் –அவன்
வருகைக்காக…

போனவன் வரவே இல்லை
கலவரம் கொண்டேன்
கண்ணீர் வடித்தேன் –அவனோ
சல்லாபக் கட்டிலில்
வேறொருத்தியுடன்!

தொட்ட இடம்
எரிகிறதே –தீயாய்
என்னைச் சுடுகிறதே!
கொண்ட காதல் எமனாய் மாறி
கழுத்தை இறுக்கி நேரிக்கிறதே
அவன் தந்த முத்தம் முள்ளாய் மாறி
நெஞ்சைக் குத்தி வதைக்கிறதே!

அன்பு…
அதற்காகத்தானே ஏங்கினேன்
காதலன் என்று பாராமல்
கணவனைப் போல் நடத்தினேன்

காலம் மாறிவிட்டதா?
கலிகாலம் வந்துவிட்டதா?
காதல் எனும் தெய்வத்திற்கு
கேடு வந்துவிட்டதா? –இல்லை
காதல் என்பது காமமாய்
மாறி போய் விட்டதா?

காமம் கொண்ட மிருகமே
மனதைக் கொன்ற அரக்கனே
உன் தாயும் ஒரு பெண்தான்
பெண்ணை மதிக்க மறந்தாயோ
கண்ணை இழந்து நின்றாயோ?

மணப்பாய் ஒரு பெண்ணை
அவள் செய்வாள் பதி துரோகம்
உணர்வாய் என் வலியை –பின்
வெறுப்பாய் உன் வாழ்வை!

பெறுவாய் ஒரு குழந்தை
அது பெண்ணாய் வந்து பிறக்கும்
உயிராய் நீ வளர்ப்பாய் –அவள்
வாழ்வை ஒருவன் அழிப்பான்!

காதல் துரோகியே –நீ
கண்ணிழந்து குருடாவாய்
இனிக்க வார்த்தை பேசிய நாவு
இழுத்துக்கொண்டுப் போகும்
தொட்ட உன் கரங்கள்
செயலிழந்து நிற்கும்!
எட்டிப் பார்ப்பதற்கு –உன்னை
ஈ கூட நெருங்காது!

நாசமாய் போகுமடா
உன் ஒழுங்கற்ற வாழ்வு
நீ செய்த வினைகள் எல்லாம்
எதிரில் வந்து நிற்கும்
துடிப்பாய், நீ அழுவாய்
தற்கொலை செய்ய முனைவாய்!

நிம்மதியை இழப்பாய்
பொருளெல்லாம் கரைப்பாய்
பிச்சை ஏற்றுத் திரிவாய்
தெரு நாயைப் போல்
மடிவாய்!

2 கருத்துரைகள்:

நந்தா சொன்னது…

உங்களுக்கு ஏற்பட்ட நிலைமையைக் கண்டு நானும் வருந்துகிறேன்.. ஆண்டவன் அவனுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்!

து. பவனேஸ்வரி சொன்னது…

@நந்தா: நன்றி தோழர்