செவ்வாய், 13 டிசம்பர், 2011

எம் தவற்றில் உன் பங்கு?



உத்தமியா என கேட்பவனே
நீ யோக்கியனா என சொல்வாயா?
ஊருக்கு ஒருத்தியை வைத்துக்கொண்டு
நீ அடித்திட்ட கூத்தினை சொல்லிடவா?

வேசி என எம்மை அழைத்தவனே
உன் வேசத்தை நானும் கலைத்திடவா?
புலி தோல் போர்த்திய நரியென்று
உண்மையை உலகிற்கு உணர்த்திடவா?

எம் சாதனை பற்றிக் கேட்பவனே
உன் சாதனையை நீ சொல்வாயா?
மங்கையர் மானத்தை விற்பவனே
உன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பாயா?

விடுதலைக்காக வீதிவரை
தமிழகம் சென்று உழைத்தவள் நான்
களத்தின் நின்றதாய் பொய் சொல்லி
பிச்சைக் கேட்டுத் தின்பவன் நீ!

காமப் பசிக்கு காதலை இரையாக்கி
காசுப் பணத்திற்கு இயக்கத்தைக் கைக்காட்டி
புறம்போக்கு நாய்களின் கால்களை நக்கி
பிணம் தின்னும் நீயும் புலியா?

துரோகி நாய் உன்னை
ஏற்பதற்கோர் குழு இருக்க
வீரப் பெண் எம்மை
புறக்கணிக்க யார் உண்டு?

தவறு நான் செய்தேன் உண்மை
தண்டனை கிடைத்திடல் நன்மை
வேசம் போடு விசமியே
உன் பங்கும் அதிலுண்டு மறவேல்!

எந்த நாயிடத்தும்
நீதி நான் கேட்கவில்லை
குறி உள்ள பெட்டையே
எம் பெண்மையில் உனக்கென்ன சந்தேகம்?

புலி என்று பூச்சாண்டி
எம்மிடமே காட்டிவிட்டாய்
இனி சிங்கத்தின் சீற்றத்தினை
பொறுத்திருந்து பார் நரியே!

(வன்னிமைந்தன் என்ற நாதாரியின் கிறுக்கலுக்கு எமது பதில். உன்னைப் போல் புனைப்பெயரில் எழுத நான் கோழை அல்ல. தைரியம் இருப்பின் நேருக்கு நேர் மோது இனத் துரோகியே!)


கருத்துகள் இல்லை: