செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அமைதியாய் இருப்பது ஏனோ?



மிச்சமிருந்த உணர்வுகளும்
இன்று அடக்கம் செய்யப்பட்டுவிட்டன
இதயத்தில் இருந்த சிறிதளவு ஈரமும்
இன்று காய்ந்துப் போய்விட்டது!

வலிகளைத் தாங்கித் தாங்கி
இருதயம் மரத்துப் போய்விட்டது
ஏமாற்றங்களைச் இடைவிடாது சந்தித்து
உயிர் நொந்துப் போய்விட்டது!

என்னை வெறுக்கிறேன் என்று
ஒவ்வொரு முறை நீ கூறும் போதும்
இதயம் சுக்கு நூறாய் உடைந்து
பின் ஒட்டப்பட்டு மீண்டும் உடைகின்றது!

விளையாட்டாய் ஒருமுறைக் கூறலாம்
கதைக்கும் போதெல்லாம் கூறுகிறாய்
என்னை வெறுக்கிறேன் என்று
இயல்பாகக் கூறுகின்றாய்!

வெறுக்கும் அளவிற்கு
நான் செய்த தவறுதான் என்ன?
பெண்ணாய் பிறந்தது தவறா?
அல்ல உம்மீது அன்பு கொண்டது தவறா?

யாரை நான் குறைசொல்வேன்?
யாரிடம் ஆறுதல் தேடுவேன்?
எங்குப் போய் முறையிடுவேன்?
எவரிடத்தில் பகிர்ந்துக்கொள்வேன்?

அழகாகத் தெரிவதெல்லாம்
அவஸ்தையில் முடிவது ஏனோ?
என் அகம் உனக்குத் தெரிந்திருந்தும்
அமைதியாய் இருப்பது ஏனோ?

2 கருத்துகள்:

logu.. சொன்னது…

kastamthaan.

Unknown சொன்னது…

ஒரு கவிதை எழுத முடிந்திருக்கிறதே!..