சனி, 19 பிப்ரவரி, 2011

இறுதிவரை நீளுமா..?

இதயச்சுவற்றில் என்னை
எழுத மறந்தவனே
உன் உயிரோடு உயிராக
என்னுயிரைக் கலப்பாயா?

அடியோடு உன்னை
மறக்கவும் முடியவில்லை
உரிமையோடு உன்னை
நினைக்கவும் முடியவில்லை!

அலைபாய்கிறது உள்ளம்
அடக்க நினைக்கிறது நெஞ்சம்
ஆசைகள் ஆயிரம் ஆயிரமாய்
இதயத்தின் ஓரத்திலே!

இது வயதுக் கோளாரா
பருவ விளையாட்டா
அறியாத பொருளா
சுகமான சுமையா?

உன்னைப் போல் ஒருவனை
இதுவரையில் கண்டதில்லை
உள்ளத்தின் ஆசைகளை
ஒருமுறையும் சொன்னதில்லை!

காணாத ஏக்கங்கள்
நெஞ்சோடு தீருமா?
உன் அன்பான ஆறுதல்
இறுதிவரை நீளுமா?

3 கருத்துகள்:

logu.. சொன்னது…

Wovvvvvvvvvv...

Romba nalaikapram..
Inimaiyai.. sugamai oru kavithai.

Romba romba nallarukku.

R.ALAGENDRA LL.B Hons (UKM) சொன்னது…

nice blog tc bye

து. பவனேஸ்வரி சொன்னது…

லோகு: நன்றி நண்பரே.

பரத்: நன்றி.