வியாழன், 18 நவம்பர், 2010

தோழா!


தோழா
ஆழ்கடலில் எடுத்த
முத்தைப் போன்றது
நமது நட்பு
பூவிலிருந்து எடுத்த
தேனைப் போன்றது
நமது நட்பு!

உனது வருகையால்
நான் என்னை அறிந்தேன்
உனது உறவால்
நட்பின் புனிதத்தை அறிந்தேன்!

சோகத்தில் வாடிய போது
ஆறுதல் கூறினாய்
மகிழ்ச்சியில் திளைத்தபோது
நீயும் பகிர்ந்துக் கொண்டாய்!

தோல்வியில் துவண்டபோது
உற்சாகம் கொடுத்தாய்
வெற்றி கண்டபோது
நீயும் கொண்டாடினாய்!

கல் தடுக்கி விழுந்த போது
கை கொடுத்து உதவினாய்
வாழ்க்கைப் பாதை தவறியபோது
சரியான வழியைக் காட்டினாய்!

தாயாக இருந்து
பாசம் காட்டினாய்
தந்தையாக இருந்து
அறிவுரைக் கூறினாய்!

ஆசானாக இருந்து
சந்தேகம் தீர்த்தாய்
தோழியாக இருந்து
உதவிகள் புரிந்தாய்!

தோழா,
இப்பிறப்பில் மட்டுமல்ல
இனி எப்பிறவியிலும்
நீயே என் தோழனாக
வர வேண்டும்!

2 கருத்துகள்:

logu.. சொன்னது…

Thaduki vilumpothu aruthal solvathu natpalla..

Thangi pidippathu.

Super Lines.

chadrasekaran சொன்னது…

namathu manathuku pidithathupol matravr irunthal ippadi kavithai pirakkum