புதன், 6 ஜனவரி, 2010

ஆயிரம் கவிதைகள்


ஆயிரம் கவிதைகள்
உனக்காகத் தீட்டினேன்
அனுப்பியவை சில
அனுப்பாதவைப் பல!

உணர்ச்சிகள் அனைத்திற்கும்
உயிர் கொடுக்கத் துடிக்கிறேன்
அனைத்தையும் அறிந்துக்கொண்டு
அறியாதவன் போல் நடிக்கலாமா?

ஆசைகள் நீருற்றாய்
அடங்காமல் பெருங்கெடுக்கின்றன
அன்புக்குரியவன் நீயோ…
அக்கறையில் இருக்கின்றாய்!

இதயத்தில் துடிதுடிக்கும்
இருதயமும் நீதானோ
என்றுமே உடன் இருக்கும்
என்னுயிரும் நீதானோ!

கருத்துகள் இல்லை: