வியாழன், 2 ஏப்ரல், 2009

தவிக்கின்றேன்…


கவலைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
சொல்லத்தான் நினைக்கின்றேன்
வார்த்தைகள் வரவில்லை!

நெஞ்சம் நோகுதடா
சொல்லாமல் வாடுதடா
நஞ்சுக் கசியுதடா
கொல்லாமல் கொல்லுதடா!

அறியாமல் செய்துவிட்டேன்
மாபெறும் தவறொன்றை
தெரியாமல் விழுந்துவிட்டேன்
காதல் குழியொன்றில்!

எழுவதற்கு பலமில்லை
மறக்க இயலவில்லை
அழுவதற்குத் மனமில்லை
சொல்லத் துணிவில்லை!

அஞ்சி அஞ்சி வாழ்கின்றேன்
செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்
தனிமையால் வாடுகின்றேன்
தனியாகத் தவிக்கின்றேன்!

9 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

விதங்கள்
வதங்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அஞ்சி அஞ்சி வாழ்கின்றேன்
செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்
தனிமையால் வாடுகின்றேன்
தனியாகத் தவிக்கின்றேன்!//

அப்ப ஒருதலைக் காதல் தான்!

Raju சொன்னது…

\\நஞ்சுக் கசியுதடா\\
'க்' தேவையில்லை என நினைக்கிறேன்.

\\அறியாமல் செய்துவிட்டேன்
மாபெறும் தவறொன்றை
தெரியாமல் விழுந்துவிட்டேன்
காதல் குழியொன்றில்!\\
அருமை....

சக்தி சக்திதாசன் சொன்னது…

கவிதையின் ஆழன் கனத்த நெஞ்சின் பாரத்தில் கலந்த சோகத்தைக் காட்டி நிற்கிறது.

அன்புடன்
சக்தி

பெயரில்லா சொன்னது…

kavalaigal palavatham aanal kathal mattum oru vitham kathal kondoor ellam ithai kandathum kanneerum kolvar...vali arintha ullam

இராகவன் நைஜிரியா சொன்னது…

கவியரசு கண்ணதாசன் வரிகள் ஞாபகத்து வருகின்றன.

நெஞ்சம் மறப்பதில்லை...

புதியவன் சொன்னது…

//அறியாமல் செய்துவிட்டேன்
மாபெறும் தவறொன்றை
தெரியாமல் விழுந்துவிட்டேன்
காதல் குழியொன்றில்!
//

தவிப்பை உணர முடிகிறது...

நான் சொன்னது…

உங்கள் வலியின்உணர்வு மிகவும் நியாயமானது
ஆனாலும் எல்லாம் காலபோக்கில் சரியாகிவிடும்
வாழ்த்துகள்

குமரன் மாரிமுத்து சொன்னது…

உணர்வுகளின் வெளிப்பாடு நகு இழையோடி இருக்கிறது. வாழ்த்துக்கள்.