செவ்வாய், 10 மார்ச், 2009

வேண்டாம் வன்முறை!


வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா!

சதி வேண்டாமடா
சாதிக் கொடுமை வேண்டாமடா
பொய் வேண்டாமடா
போலிப் பெருமை வேண்டாமடா!

மது வேண்டாமடா
மயக்கும் மாது வேண்டாமடா
கத்தி வேண்டாமடா
கடுஞ் சொற்கள் வேண்டாமடா!

கண்ணீர் வேண்டாமடா
காதல் தொல்லை வேண்டாமடா
சீற்றம் வேண்டாமடா
சிறை வாசம் வேண்டாமடா!

24 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இது எதுவுமே இல்லாட்டி

வேற எதோவொன்னு இருக்கும்

நமக்கு வேண்டாதது ...

S.A. நவாஸுதீன் சொன்னது…

வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா!
..............

இவை அனைத்தும் இல்லாத இடம் கல்லறை மட்டும்தான் அதுவும் வேண்டாம் என்றால் வேறு எந்த இடம் சரிவரும் என்று புரியவில்லை

பெயரில்லா சொன்னது…

நம் நாட்டுக்கு முக்கியமாக நம் சமூகத்துக்கு அவசியமான கவிதை :-)

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//இது எதுவுமே இல்லாட்டி

வேற எதோவொன்னு இருக்கும்

நமக்கு வேண்டாதது ...//

என்ன அது?

து. பவனேஸ்வரி சொன்னது…

Syed Ahamed Navasudeen கூறியது...
வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா!
..............

//இவை அனைத்தும் இல்லாத இடம் கல்லறை மட்டும்தான் அதுவும் வேண்டாம் என்றால் வேறு எந்த இடம் சரிவரும் என்று புரியவில்லை//

ஏன் நாட்டில் அமைதியாக வாழ முடியாதா?

து. பவனேஸ்வரி சொன்னது…

இனியவள் புனிதா கூறியது...
//நம் நாட்டுக்கு முக்கியமாக நம் சமூகத்துக்கு அவசியமான கவிதை :-)//

இருக்கலாம்... எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதினேன். அவ்வளவே...தங்கள் கருத்துக்கு நன்றி.

S.A. நவாஸுதீன் சொன்னது…

ஏன் நாட்டில் அமைதியாக வாழ முடியாதா?

இந்த Positive Approach-ச்ச தான் உங்ககிட்ட இருந்து எதிபார்த்தேன்

து. பவனேஸ்வரி சொன்னது…

Syed Ahamed Navasudeen கூறியது...
ஏன் நாட்டில் அமைதியாக வாழ முடியாதா?

//இந்த Positive Approach-ச்ச தான் உங்ககிட்ட இருந்து எதிபார்த்தேன்//

இப்படியும் பேசுவீங்களா?

S.A. நவாஸுதீன் சொன்னது…

து. பவனேஸ்வரி கூறியது...

Syed Ahamed Navasudeen கூறியது...
ஏன் நாட்டில் அமைதியாக வாழ முடியாதா?

//இந்த Positive Approach-ச்ச தான் உங்ககிட்ட இருந்து எதிபார்த்தேன்//

இப்படியும் பேசுவீங்களா?

உங்களின் ஆதங்கம் புரிந்தாலும் நான் சொல்ல வந்தது என்னவென்றால், வாழ்வில் வெறுப்பு நிறைந்த பகுதிகளை மட்டுமே எண்ணி சோகம் கொண்டு இருக்காமல் விடியலை நோக்கி நம்பிக்கையோடு நடப்போம் என்பது தான்.

முன் சொல்லிய விதத்தில் தவறு இருந்தால் வருந்துகிறேன்

Tamil whatsapp stickers and png images சொன்னது…

படிக்க கவிதைபோல் உள்ளது. வாழ்த்துக்கள்.

து. பவனேஸ்வரி சொன்னது…

Syed Ahamed Navasudeen கூறியது...
து. பவனேஸ்வரி கூறியது...

Syed Ahamed Navasudeen கூறியது...
ஏன் நாட்டில் அமைதியாக வாழ முடியாதா?

//இந்த Positive Approach-ச்ச தான் உங்ககிட்ட இருந்து எதிபார்த்தேன்//

இப்படியும் பேசுவீங்களா?

//உங்களின் ஆதங்கம் புரிந்தாலும் நான் சொல்ல வந்தது என்னவென்றால், வாழ்வில் வெறுப்பு நிறைந்த பகுதிகளை மட்டுமே எண்ணி சோகம் கொண்டு இருக்காமல் விடியலை நோக்கி நம்பிக்கையோடு நடப்போம் என்பது தான்.

முன் சொல்லிய விதத்தில் தவறு இருந்தால் வருந்துகிறேன்//


ஐயையோ... தவறெல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. தொடர்ந்து இணைந்திருங்கள்.

S.A. நவாஸுதீன் சொன்னது…

நன்றி பவனேஸ்வரி

இராகவன் நைஜிரியா சொன்னது…

இப்ப இப்பத்தான் கவிதைகளைப் படித்து அர்த்தம் புரிந்து கொள்ள முயற்ச்சிகின்றேன்.

நானும் காலையில் இருந்து ஒரு நாலு தடவை வந்துட்டேன். ஒவ்வொரு முறையும் 2(அ) 3 தடவை படிச்சேன்.

அர்த்தம் புரிந்து கொண்டது, அனைவருக்கும் ஒரு நிம்மதியான, சச்சரவில்லாத வாழ்க்கை வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்கள்.

மிகவும் கவர்ந்த வரிகள்..

// வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா! //

வன்முறை இல்லை என்றால், அடிதடியும் இல்லை, சண்டையும் இல்லை, சண்டை இல்லை என்றால் சவக்குழியும் இல்லை...

அருமை... ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொடர்புங்க...

புதியவன் சொன்னது…

//கண்ணீர் வேண்டாமடா
காதல் தொல்லை வேண்டாமடா
சீற்றம் வேண்டாமடா
சிறை வாசம் வேண்டாமடா!//

கவிதை நல்லா இருக்கு...ஆனா, ’காதல் தொல்லை வேண்டாமடா’ இந்த வரி எதற்கு...?

நான் சொன்னது…

பவன் அழகான அருமையான ஒரு பட்டியல்
எதுஎது வேண்டாமோ அத்தனையும் பட்டியலில் இருக்கிறது
மீதம் அத்தனையும் வேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
வாழ்த்துகள்

கிருஷ்ணா சொன்னது…

ஹஹ.. மதுவும் மாதுவும் வேண்டாம் என்றிருந்திருந்தால் கண்ணதாசன் கவிதை எழுதியிருக்க மாட்டாரே! மலேசிய மண்ணில் தமிழ் இளைஞர்களின் (பெரும்பாலானோர்) நிலையை பார்த்து வெகுண்டு எழுதியிருக்கின்றீர்கள்! வாழ்த்துக்கள்.. எதற்கும், எனது 'சொன்னா கேக்கனும்' பதிவையும், எனது புதுக்கவிதை ஆய்வுக் கட்டுரையையும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.. ப்ளீஸ்..
கவித்தமிழில் அல்ல.. www.krishnausj1.blogspot.com இங்கே..

மேவி... சொன்னது…

hmmm...
present madam

து. பவனேஸ்வரி சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
//இப்ப இப்பத்தான் கவிதைகளைப் படித்து அர்த்தம் புரிந்து கொள்ள முயற்ச்சிகின்றேன்.

நானும் காலையில் இருந்து ஒரு நாலு தடவை வந்துட்டேன். ஒவ்வொரு முறையும் 2(அ) 3 தடவை படிச்சேன்.

அர்த்தம் புரிந்து கொண்டது, அனைவருக்கும் ஒரு நிம்மதியான, சச்சரவில்லாத வாழ்க்கை வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்கள்.

மிகவும் கவர்ந்த வரிகள்..

// வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா! //

வன்முறை இல்லை என்றால், அடிதடியும் இல்லை, சண்டையும் இல்லை, சண்டை இல்லை என்றால் சவக்குழியும் இல்லை...

அருமை... ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொடர்புங்க...//

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//கண்ணீர் வேண்டாமடா
காதல் தொல்லை வேண்டாமடா
சீற்றம் வேண்டாமடா
சிறை வாசம் வேண்டாமடா!//

//கவிதை நல்லா இருக்கு...ஆனா, ’காதல் தொல்லை வேண்டாமடா’ இந்த வரி எதற்கு...?//

சொல்ல வேண்டும் என்று தோன்றியது...அவ்வளவே... கருத்துக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//பவன் அழகான அருமையான ஒரு பட்டியல்
எதுஎது வேண்டாமோ அத்தனையும் பட்டியலில் இருக்கிறது
மீதம் அத்தனையும் வேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
வாழ்த்துகள்//

அத்தனையும் பட்டியல் போடவில்லையே ஐயா...

து. பவனேஸ்வரி சொன்னது…

கிருஷ்ணா கூறியது...
//ஹஹ.. மதுவும் மாதுவும் வேண்டாம் என்றிருந்திருந்தால் கண்ணதாசன் கவிதை எழுதியிருக்க மாட்டாரே! மலேசிய மண்ணில் தமிழ் இளைஞர்களின் (பெரும்பாலானோர்) நிலையை பார்த்து வெகுண்டு எழுதியிருக்கின்றீர்கள்! வாழ்த்துக்கள்.. எதற்கும், எனது 'சொன்னா கேக்கனும்' பதிவையும், எனது புதுக்கவிதை ஆய்வுக் கட்டுரையையும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.. ப்ளீஸ்..
கவித்தமிழில் அல்ல.. www.krishnausj1.blogspot.com இங்கே..//

ஹ்ம்ம்... அவரவருக்கு எது பிடிக்குமோ அதைத் தானே செய்ய முடியும்? நம்மால் சொல்ல மட்டும்தானே முடியும்? உங்கள் பதிவைக் கண்டேன். நன்று. அதிலே எனது பதிவிற்குரிய கருத்தும் மறைமுகமாக ஒளிந்திருப்பதையும் கண்டேன். மிக்க நன்றி.

logu.. சொன்னது…

\\வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா!\\

Hello Pavans..
Eannanga posukunu
ipdi sollitteenga...

Engalukellam intha adithadi.. Sandai ithellam tholla irukkura
thundu mathiri..
eappavum koodave irunthathan
nallarukkum.

By..
Dhaatha Logu.

து. பவனேஸ்வரி சொன்னது…

logu.. கூறியது...
\\வன்முறை வேண்டாமடா
வாழ்வில் அடிதடி வேண்டாமடா
சண்டை வேண்டாமடா
சவக் குழியும் வேண்டாமடா!\\

//Hello Pavans..
Eannanga posukunu
ipdi sollitteenga...

Engalukellam intha adithadi.. Sandai ithellam tholla irukkura
thundu mathiri..
eappavum koodave irunthathan
nallarukkum.

By..
Dhaatha Logu.//

சொல்வது என் கடமை; கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்...:)

logu.. சொன்னது…

\\//Hello Pavans..
Eannanga posukunu
ipdi sollitteenga...

Engalukellam intha adithadi.. Sandai ithellam tholla irukkura
thundu mathiri..
eappavum koodave irunthathan
nallarukkum.

By..
Dhaatha Logu.//

சொல்வது என் கடமை; கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்...:)\\

Ada.. Appadiya?
Oknga.. kettukalam...
innum ennenna solla poreenga?