வியாழன், 25 நவம்பர், 2010

காதலன்!


காதலிக்க ஆள் தேடி
காத்துக்கொண்டிருக்கிறேன்
காதலன் கிடைப்பானா
காணாமலே போவானா?

கண்ணாமூச்சி விளையாட்டு
இன்னும் உனக்கு ஏன்?
கண்ணாரக் கண்டிட
வந்திட தயக்கம் ஏன்?

கொட்டும் மழையினிலே
இருவரும் நனைய வேண்டும்
உந்தன் அணைப்பினிலே
இவள் குளிர்காய வேண்டும்!

பார்க்கும் போதெல்லாம்
புன்னகைச் செய்ய வேண்டும்
பார்க்காத போதெல்லாம்
உன்னையே நினைக்க வேண்டும்!

ஆறுதல் நீ சொல்ல
உன் தோளில் நான் சாய்வேன்
ஒவ்வொரு இரவினிலும்
உன் மடியில் நான் துயில்வேன்!

தவழ்ந்து வரும் காற்றினில்
உன் சுவாசம் கலந்திருக்குமா?
சபை கூடும் இடத்தினில்
உன் பாதச்சுவடு பதிந்திருக்குமா?

உருவத்தைக் காட்டாமல்
உருமாறி வருகின்றாய்
ஏனடா என்னை- நீ
இம்சை செய்கின்றாய்?

என் உயிருக்கு உரியவனே
விரைந்தோடி வந்துவிடு
இதயத்தில் வசிப்பவனே
நல்வாழ்க்கைத் தந்துவிடு!

3 கருத்துகள்:

logu.. சொன்னது…

Ipdium oru aasaiya?

Romba nallarukku pavans..

VELU.G சொன்னது…

வந்துடவாங்க வந்துடவாங்க வெய்ட் பண்னுங்க

கவிதை அருமை

chandrsekaran சொன்னது…

ano penno, akilathil yellorin, udalukum manthukum, uerukkum unarvukum, kadalal santhiillai, kathalal theervuillai