புதன், 24 நவம்பர், 2010

உன்னால்!


பூவாகத்தான் இருந்தேன்
உனது வெப்பக் கதிர்களால்
வாடினேன் வதங்கினேன்
இறுதியில் உதிர்ந்தேன்!

கனியாகத்தான் இருந்தேன்
நீ சுவைத்ததால்
தித்திப்பிழந்து அழுகிவிட்டேன்!

பனியாகத்தான் இருந்தேன்
உன் நிழல் பட்டதும்
நீராகி வற்றிவிட்டேன்!

அமுதாகத்தான் இருந்தேன்
உன் பல் பட்டதும்
கொடிய நஞ்சாகிவிட்டேன்!

பெண்ணாகத்தான் இருந்தேன்
மலருக்கு மலர் தாவும்
வண்டு நீ என்பதை அறிந்தவுடன்
மனம் நொந்து பைத்தியமாகிவிட்டேன்!


2 கருத்துகள்:

logu.. சொன்னது…

hayoda..

evlo kasappana varthaigal..
ean ipdi?

chandrasekaran சொன்னது…

porul kutram atikam