திங்கள், 1 மார்ச், 2010

கவிதைத் தந்த காயம்!


அருமையான கவிதை
இனிமையான வரிகள்
எனக்கு மட்டும் கசந்தது
எண்ணத்தைக் குழப்பியது
பலமுறைப் படித்துப் பார்த்தேன்
சரியாக விளங்கவில்லை
புரிந்துக்கொள்ள இயலவில்லை!

காயம் பட்ட இதயத்திற்கு
மருந்துத் தடவ நினைக்கின்றாய்
உன் நற்குணத்திற்கு நன்றி!
என் இதயம் சதைதான் –ஆனால்
கண்ணாடியின் தன்மைக் கொண்டது
ஒருமுறை உடைந்துவிட்டது
இனி ஒட்டவைக்க இயலாது!

பிடிக்காது என்று கூறவில்லை
பிடிக்கும் என்றும் சொல்லவில்லை
தூய்மையான நட்பை நாடினேன்
கொடியக் காதலைக் கொடுக்காதே
துயரக் கடலில் மூழ்கிவிட்டேன்
மீண்டும் அழ நான் விரும்பவில்லை!

இரணப்பட்ட மனதை
காதலெனும் கத்தியால் கீறாதே
நான் வலி தாங்க மாட்டேன்!
நொந்துப்போன இதயத்தை
உன் அன்பால் மேலும் அழுத்தாதே
நான் சுமைத் தாங்க மாட்டேன்!

2 கருத்துகள்:

Romeoboy சொன்னது…

இந்த மாதிரி அழகா இன்னும் அதிகமா எழுதுங்க. அருமை :)

து. பவனேஸ்வரி சொன்னது…

ரோமியோ: நன்றி நண்பரே....முயற்சிக்கிறேன்...