உடந்துபோன
மனதை
எத்தனை
முறை ஒட்டுவது?
ஒட்டுவதும்
உடைவதும் வாடிக்கை
இது
மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை!
ஒட்டி
ஒட்டி உடைந்த மனம்
இன்று
துகள்களாகி போயிற்றே
இனி
ஒட்டவும் முடியாது
யாராலும்
உடைக்கவும் முடியாது!
இனி
இதற்கு உயிரில்லை
இதனால்
எவ்வித பயனுமில்லை
இருந்த
அறிகுறி தெரியவில்லை
இது
இருப்பதுதானே பெரும் தொல்லை?
வந்து
அள்ளிக்கொள்ளுங்கள்
காற்றினில்
கரைக்கலாம்
கடலோடு
கலக்கலாம்
மண்ணினிலே
புதைக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக