வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கண்ணீர் அஞ்சலி…




அம்மா
எம் தலைவனை கருவறையில்
ஈரைந்துத் திங்கள் சுமந்தவளே
நீ வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்த போதிலும்
உன்னை நேரில் சந்திக்க இயலா பாவியானேனே!

ஈடு இணையற்றத் தலைவனை
உலகத் தமிழர் போற்றும் தலைமகனை
தவமாய் பெற்று எங்களுக்கருளிய தாயே
உனக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு
கண்ணீர் வற்றிய நிலையில் நாங்கள்

கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில்
கோயில் கொண்ட தெய்வமாய் நீயும் உன் மகனும்
ஆனால், உனக்கு இறுதி அஞ்சலிச் செய்யவும் துணிவின்றி
மண்ணை இழந்து, மானம் இழந்து எம் மக்கள்
மரம் போல் கிடக்கின்றனர்!

அரச மரியாதையுடன்
அடக்கம் செய்ய வேண்டிய உன்னை
அனாதைப் பிணம் போல் எரியவிட்டுவிட்டோமே
ஈனப்பிறவிகள் நாய்களை எரித்து கேவலம் செய்ததை
என்னவென்று சொல்வேனம்மா?

இரத்தம் கொதிக்கிறது
உடல் சூடேறி நரம்புகள் புடைக்கின்றன
விரல்கள் தானாக மேலுதட்டைத் தொட
எமக்கு முறுக்குவதற்கு மீசை மட்டும் அல்ல
வலிமையும் இல்லை என்பதை அறிந்துக்கொண்டேன்!

அஸ்தியைக் காற்றிலே பரக்கவிட்டவர்கள்
அந்தக் காற்றினையே சுவாசமாய் சுவாசிக்கப்போம்
என்பதனை மறந்தனர் போலும்
எங்கள் ஒவ்வோர் மூச்சினிலும் உன் ஆத்மா
சங்கமம் செய்திருக்கிறதம்மா

’கலைஞர் ஐயா ஏன் திருப்பி அனுப்பிவிட்டார்?’
கேட்டாயா தாயே இந்தக் கேள்வியினை
அவனை ஐயா என்று அழைத்தாயா அம்மா?
அந்தக் ‘கொலை’ஞனைக் கலைஞன் என்றாயா?
வலிக்கிறது தாயே இதயம் கனத்து வலிக்கிறது!

நீயுமா நம்பினாய் அவனை?
சிகிச்சைக்காகச் சென்ற உன்னை
சிம்மாசனம் பறிபோய்விடும் என்று
சென்னையிலேயே திருப்பியனுப்பிய பாதகனை
ஐயா என ஏன் அழைத்தாய் தாயே?

தமன்னாவுக்கும் அனுஷ்காவுக்கும்
கலைச் சேவைக்காக ‘கலைமாமணி’ விருது
உடுப்பும் இடுப்பும் குறைத்ததால் வழங்கினானோ?
உனக்காக விருது கொடுக்கவேண்டாம்
சிகிச்சைப் பெற அனுமதி கொடுத்திருக்கலாமே?

இவ்வளவு சீக்கிரம்
எங்களைப் பிரிந்துச் சென்றுவிட்டாயே
உன் காலில் விழுந்துத் தொழ வேண்டும்
உன்னை ஆரத்தழுவ வேண்டும் என்ற எண்ணமெல்லாம்
எட்டாக் கனியாய் ஆகிவிட்டதே அம்மா

பெற்ற மக்களுடன் இருக்க வேண்டிய நீ
எம் மக்களின் நலனுக்காக தனித்திருந்து
புத்திர சோகத்தில் வாடி வதங்கி
இன்று உதிர்ந்து போய் விட்டாயே
இதனை எப்படித் தாங்குவேன் தாயே?

வீரத்தமிழ்மகனைப் பெற்றெடுத்தவளே
கோழையாய் இருக்கிறதம்மா எமது இனம்
விரப்பாலூட்டி தாலாட்டி சீராட்ட
உன்னைப் போல் தாய் ஒருத்தி
இனி அவனியில் பிறப்பாளா?

என் அன்னையே,
எங்களை அழ வைத்துவிட்டாயே
எம்மைக் கதற வைத்துவிட்டாயே
எம் இனத்தைத் தவிக்க வைத்துவிட்டாயே
தாயே, நீ மீண்டும் பிறவியெடுக்க மாட்டாயா?

சிங்கள இனவெறி நாய்கள்
உன் சடலத்தைக் கூட விட்டுவைக்கவில்லையம்மா
இது உனக்கு வந்த அவமானம் அல்ல
நம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தினையே
பிணம் தின்னும் ஓநாய்கள் அழிக்கப்பார்க்கின்றன!

விடமாட்டோம் தாயே!
உனது தியாகமும் என் தலைவனின் கனவும்
கரைந்துப்போகவும் கலைந்துப்போகவும்
ஒரு காலும் நாங்கள் விடமாட்டோம்
கடைசி மூச்சி உள்ளவரைப் போராடுவோம்!

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
இதனை உலகிற்குப் புரிய வைப்போம்
துணிந்தவனுக்கு மரணமும் துச்சம்தான்
இனி இழப்பதற்கு எம்மிடம் ஒன்றுமில்லை
ஆனால் அடைவதற்கு இலட்சியம் உண்டு!

வீரத்தாயே, தியாகச் சுடரே
எந்த மண்ணில் நீ உயிர் நீத்தாயோ
அந்த மண்ணை நாம் மீட்போம்
இது தமிழீழம் என்று உரக்கச் சொல்வோம்
புலிக்கொடியை நாட்டுவோம்!

ஏழு கடல்கள் தாண்டி
ஏழு கண்டங்கள் கடந்து
உலகத் தமிழர்கள் இணைந்து
ஈழத்தை நெஞ்சில் சுமந்துப் போராடுவோம்
கடைசித் தமிழன் உள்ளவரை!

5 கருத்துகள்:

logu.. சொன்னது…

வீரத்தாயே, தியாகச் சுடரே
எந்த மண்ணில் நீ உயிர் நீத்தாயோ
அந்த மண்ணை நாம் மீட்போம்
இது தமிழீழம் என்று உரக்கச் சொல்வோம்
புலிக்கொடியை நாட்டுவோம்!

eye brows சொன்னது…

agangara chiruppugal alinthupogattum amma un udal mel itta theeinal

து. பவனேஸ்வரி சொன்னது…

ஈழம் விரைவில் மலரும்! அங்கே உனக்கொரு நினைவுச் சின்னம் எழுப்பி உலகறிய வழிப்படுவோம்!

Unknown சொன்னது…

அம்மா கவலை படாதிர்கள் ஒரு போதும் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு மகன்களாக, மகள்களாக.
அடுத்த ஜென்மத்தில் உன் வயற்றில் மகனாக பிறக்க வேண்டும். அதுவே நங்கள் இறைவன்னிடம் வேண்டுகிறோம்.
ஈழம் விரைவில் மலரும்!

து. பவனேஸ்வரி சொன்னது…

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்