வியாழன், 24 டிசம்பர், 2009

மறக்க முடியவில்லை


சந்தித்த போதெல்லாம்
சிந்திக்கவே இல்லை
சிந்திக்கும் வேளையிலோ
சந்திக்க வாய்ப்பில்லை!

ஓரக்கண்ணால் பார்த்திருந்து
அமைதியாக புன்னகைத்து
கண்ணாலே பேசினேனே
அது உனக்குப் புரியவில்லை?

பொய் வேசம் வெளியிலே
மெய்க் காதல் மனதிலே
உன் மீது ஆசையென்று
இறுதிவரை சொல்லவில்லை!

எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் கவிதைகள்
சொல்ல நினைக்கையிலே
என் வசம் நீ இல்லை!

உன்னைக் காணாமல்
இதயத்தில் தவிப்பு
கண்களிலே ஏக்கம்
அதை நீ அறியவில்லை!

என் மீது விருப்பமில்லை
அது எனக்குத் தெரியவில்லை
முதல் காதல் நெஞ்சினிலே
மறக்கவே முடியவில்லை!

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

அது தான் காதல்.

து. பவனேஸ்வரி சொன்னது…

ஜமால்: காதல் என்றால் என்ன?