ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வாழ்க்கையே சாபமா?


தனிமை
ஒன்றுமே இல்லாதது போல்
இதயத்தில் வெறுமை!
வாழ்க்கையே சாபமா
நான் பூமிக்குப் பாரமா?

சோகம்
ஒவ்வொரு விடியலும் சோகம்
தூங்காத கண்களும் நோகும்!
நான் வாழத்தான் வேண்டுமா
வாழ்க்கைதான் இனிக்குமா?

ஏக்கம்
என் இரவுக்கு
இல்லையே தூக்கம்!
எனக்குள்ளே ஏன் இந்த தாக்கம்
என் துன்பத்தை எதுதான் தீர்க்கும்?

வெறுமை
பார்க்கும் இடமெல்லாம் கருமை
வாழ்வில் இல்லையே இனிமை!
என் வாழ்க்கையே வேதனை
ஏன் இந்தச் சோதனை?

5 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்க்கை

இராகவன் நைஜிரியா சொன்னது…

வாழ்க்கை என்றால் எல்லாம் கலந்துதான் இருக்கும். நாணயத்தின் இரண்டு பக்கம் போல்.

எல்லாம் சரியாகும் ஒரு நாள்.

Tamilvanan சொன்னது…

//என் வாழ்க்கையே வேதனை
ஏன் இந்தச் சோதனை?//

வாழ்க்கையை சோக‌மாக‌வும் வேத‌னையாக‌வும் பார்த்தால் சோத‌னையாக‌த்தான் தெரியும். ம‌கிழ்ச்சியாக‌ பார்க்க‌ ப‌ழ‌க‌ வேண்டும். பெரும்பாலான‌ இய‌ற்கை ம‌ற்றும் ம‌னித‌ ப‌டைப்புக்க‌ள் ந‌ம் வாழ்க்கையை ம‌கிழ்ச்சி ப‌டுத்த‌வே உருவாக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. சிந்த‌னையிம் க‌விதையிலும் கூட‌ சோக‌ம் வேண்டாமே.உங்க‌ள‌து அடுத்த‌ ப‌திவு ம‌கிழ்சிசியை த‌ர‌ட்டுமே.எதிர்ப்பார்ப்புக‌ளுட‌ன். ‌

logu.. சொன்னது…

Eanthalavirkku kodooramaga ungal manam udaigiratho..

athe alavirkku nithaanamai udainthathai allavum katrukollungal..

Kavithai rasithen..

து. பவனேஸ்வரி சொன்னது…

ஜமால்: நன்றி அண்ணா...

இராகவன்: சரியாகும் என்று எதிர்ப்பார்ப்போம்...

தமிழ்வாணன்: நன்றி...

லோகு: :) முயற்சிக்கிறேன்...