திங்கள், 6 ஏப்ரல், 2009

உன் முகம்!


காலை வேளையிலே
கண்ணாடி பார்க்கையிலே
கண்ணுக்குள் தெரிந்ததுவே
கண்ணாளன் உன் முகம்தான்!

மாலை வேளையிலே
மாவிளக்கு போடயிலே
மாமா உன் முகம்தான்
மனசுக்குள் துடிக்கிறதே!

அந்தி வேளையிலே
அந்திமழைப் பொழிகையிலே
அத்தான் உன் முகம்தான்
அன்பாகத் தெரிகிறதே!

இரவு வேளையிலே
இன்பக் கனவினிலே
இளமைத் துள்ளலிலே
இனிக்கும் உன் முகம்தான்!

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

அழகு கவிதை

காதலுடன்.

புதியவன் சொன்னது…

கவிதை முழுதும் காதல்...அழகு...