வியாழன், 19 மார்ச், 2009

காதல் தோல்வி…


காதல் என்ற ரோஜா
உன் கைகளை மட்டுமல்ல
இதயத்தையும் குத்திவிட்டதை
இதயம் திறந்து சொல்லாமலே
இனம் கண்டு கொண்டேன் நான்…

அமைதியாக இருக்கும் உனக்குள்
ஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை
பார்த்த மருகணமே உணர்ந்துக்கொண்டேன்
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!

இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!

16 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!\

மிக அருமையாக உள்ளது

நட்புடன் ஜமால் சொன்னது…

காதல் தோல்வி - இப்படி ஒன்றே இல்லை

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கண்ணீர் இல்லா காதலும் இல்லை\\

அதுவும் ஒரு சுகம் போலத்தான் ...


\\தோல்வி என்பது நிலையும் இல்லை!\\

இது மேட்டரு!

gayathri சொன்னது…

கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!


nalla iruu pa

மு.வேலன் சொன்னது…

கவிதையை விட படம் நல்லாயிருக்கு...

புதியவன் சொன்னது…

//அமைதியாக இருக்கும் உனக்குள்
ஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை
பார்த்த மருகணமே உணர்ந்துக்கொண்டேன்
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!//

வரிகளில் வலியை எங்களாலும் உணர முடிகிறது...

‘மறுகணமே’

இராகவன் நைஜிரியா சொன்னது…

// நட்புடன் ஜமால் கூறியது...

காதல் தோல்வி - இப்படி ஒன்றே இல்லை //

இதை நான் ஆமோதிக்கின்றேன்.

காதல் என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வுக்கு அழிவில்லை தோழி..

இராகவன் நைஜிரியா சொன்னது…

// இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை! //

தோல்வி என்பது நிலையும் இல்லை... வாழ்க்கையில் நிரந்தரம் என்று எதுவுமேயில்லை.. தோலிவியும் அதற்கு விதிவிலக்கல்ல.

நான் சொன்னது…

மற்றவர்களின் உணர்வறிந்து சொல்லும் சில ஆதரவான வார்த்தைகள் இந்த கவிதைகள்
வலிகளை மறக்க வைக்க உங்களின் முயற்சி வெற்றியை தரட்டும்
வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!//

இந்த வரிகள் நன்றாக உள்ளது...

'பிறந்து அழா' என்றிருந்தாலே போதும் என நினைக்கிறேன்... படிக்கையில் இடறாது.

வாழ்த்துக்கள்!

logu.. சொன்னது…

\\\கண்ணீர் இல்லா காதலும் இல்லை\\

Nallarukkunga..
\\தோல்வி என்பது நிலையும் இல்லை!\\

ithennamo thappa thonuthunga..

padam super....

பெயரில்லா சொன்னது…

wwhy looking at the squirrel like that?

பெயரில்லா சொன்னது…

thoalvi nilayaanadhu illai.. mikka arumai

கருணாகார்த்திகேயன் சொன்னது…

நல்ல கவிதை !!மனசு கனமானது

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

ரணங்கள் சொன்னது…

ரணங்களில் இருந்துதான் சரித்திரங்கள் உருவாகும் என்பது உங்களது கவிதைகளைப் பார்க்கும்போது தெரிகின்றது.
அது தான் உண்மை யதார்த்தம்

வியா (Viyaa) சொன்னது…

nice poems